10/27/2007

இலைகள் எனது கவிதைகள்

நீயும் நானும் வேறா?எனக்குள் நீ வேறாய்
உயர்ந்த மரங்களின் உச்சியை பார்க்கும் போதெல்லாம்
ஆணி வேரின் ஆழத்தை அளக்கும் என் மனம்।
காதல் மரம், உன் நினைவு வேர்।
காதல் மரத்தின் நினைவு கிளைகளில்
உதிரும் இலைகள் உனக்கான எனது கவிதைகள்!